யாழில் கைதான போதைப்பொருள் வியாபாரி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (17) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு தொகுதி கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor