மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

பதுளை – கந்தகொல்ல பகுதியில் மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் தமது மனைவியை மண்வெட்டியால், தாக்குவதற்கு முற்பட்ட போது தந்தையை மகன் போத்தல் ஒன்றினால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனால் காயமடைந்த தந்தை, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor