தமிழகத்தில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 502 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் உட்பட, ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்தித் தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்று
இந்நிலையில் சென்னையில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரியில் மொத்தம் 52 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 28 பேருக்கும், சேலத்தில் 27 பேருக்கும் கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 5,869 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor