தெரியாத பெண்ணை கட்டியணைத்து பணம் கொடுத்த நபர்

பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர், தான் கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபாய் கொடுத்துச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரத்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நபரின் செயலால் அப்பெண் அதிர்ச்சியடைத்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor