புளியந்தீவு தெற்கில் இடம்பெற்ற இளைஞர்களின் செயற்திட்டம்

பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் புளியந்தீவு தெற்கில் இடம்பெற்றது…

பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் சுதந்திர தின வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிரமதான நிகழ்வின் ஒரு கட்டமான செயற்திட்டம் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புளியந்தீவு தெற்கு ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்றைய இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன், மண்முனை வடக்கு இளைஞர் வேவை உத்தியோகத்தர் பிரவீன், மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் லவன், ரிதம் இளைஞர் கழகத்தின் உபதலைவர் பிரவீன், செயலாளர் பவனிஜா உள்ளிட்ட கழக உறுப்பினர்கள், கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தி.சில்வயன் மற்றும் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor