14 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மெதிப்பாளையம் பகுதியில் அகிலா, தனது மகன் மனோஜ்குமார் மற்றும் இரண்டு மகள்களுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.

மனோஜ்குமார் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்த நிலையில் பல மாதங்களாக போதைக்கு அடிமையானதால் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி தாய் அகிலாவால் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு மனோஜ்குமார்  இரவு உணவு உட்கொண்ட பிறகு கழிவறையில் மயங்கி விழுந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் தாயார் போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்து கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin