பைக் திருடிய மதுரையைச் சேர்ந்த 5 பேர் போலீசாரால் கைது

கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

பின், மீண்டும் வந்து பார்த்தபோது தனது பைக் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிநீர் வீழ்ச்சியருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் சிலர் நின்று கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர்.

அவர்களை போலீசார் அழைத்து வந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெருமாள்மலைப் பகுதியில் திருடு போன தமிழ்ச்செல்வம் என்பவரது பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வினோத்குமார்,

ஸ்டீபன், லெனின் மற்றும் பிரசன்னா என தெரியவந்தது.

அவர்கள் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Recommended For You

About the Author: admin