யாழை சேர்ந்த யுவதி ஒருவர் வெளிநாடொன்றில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில வசித்து வந்த யாழ்.நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்தார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த திருமதி திலிபன் பவானி வயது 41 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹாங்காங் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக சிசிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளம் வயதில் உயிரிழந்தமை உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor