அரசாங்க வங்கியொன்றில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த வங்கி பணியாளர் கைது!

அரசாங்க வங்கியொன்றில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த வங்கி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் இயங்கி வரும் அரச வங்கியொன்றில் இவ்வாறு மோசடி செய்பய்பட்டுள்ளது.

விசாரணைகள்

போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சுமார் 48 வங்கி கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார் அவருக்கு உதவிய வங்கி உதவியாளரையே குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor