மாற்று வலுவுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து இருபத்தி மூன்று மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு,முன்னாள் யாழ்.மாவட்ட வட மாகாண சபை உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உதவி வழங்கும் நிகழ்வானது வடமாகாண விழிப்புலனற்றோர் சங்கத்தின் உப தலைவர் திரு சத்தியசீலராசா ரூபராசா(ரூபன்)தலைமையில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் நடைபெற்றதுடன்,இவ் உதவித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை நெடுந்தீவை சேர்ந்த காலஞ் சென்ற திருமதி உருத்திராப்பிள்ளை தங்கலட்சமி அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு,பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி,பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் ஆதரவாளர்களும் அபிமானிகளுமான சுவீஸ் நாட்டில் வசிக்கும் திரு,திருமதி பாஸ்கரன் ஷாமினி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

Recommended For You

About the Author: admin