இருபது வயது மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜம்பத்திரண்டு வயது ஆசிரியர்

பாகிஸ்தானில் 52 வயதான ஆசிரியரை 20 வயது மாணவி ஒருவர் காதல் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பிகாம் படித்து வரும் சோயா நூர் என்ற 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், அவரது ஆசிரியரான சாஜித் அலி(வயது 52) காதல் வயப்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் தன்னுடைய காதலை சோயா நூர் வெளிப்படுத்த, சாஜித் அலி வயது வித்தியாசத்தை காரணமாக கூறி மறுத்துள்ளார்.

”நம் இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருக்கிறது, நீ நினைப்பது நடக்காது” என கூறியுள்ளார்.

இருப்பினும் தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்குமாறும், யோசித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசியில் சோயா நூரின் காதலை ஏற்ற சாஜித் அலி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதன்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor