வவுனியா மாவட்ட தலைவியை விடுதலை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியாவில் ஜனாதிபதி வருகையின் போது நியாயம் கேட்க... Read more »

ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

லெபனானின் தெற்கு பகுதியில் திங்களன்று (08) இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரத்வான் படையின் துணைத் தலைவர் விஸ்ஸாம் அல்-தவிலே... Read more »
Ad Widget Ad Widget

மௌனம் காக்க இலங்கை அரசாங்கம் முடிவு?

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மௌனம் காக்குமாறும் தேவையற்ற கருத்துகளை வெளியிட கூடாதென்றும் இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அறிய முடிகிறது. இலங்கையின் அரசியலில் மாலைத்தீவு விவகாரம் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அறிய... Read more »

EaseMyTrip இணையம் சுற்றுலா முன்பதிவை நிறுத்தியது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துகளை மாலைத்தீவின் சில அமைச்சர்கள் பதிவுசெய்ததால் இருநாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக EaseMyTrip இணையத்தளம் மாலைத்தீவுக்கான சுற்றுலா முன்பதிவுகளை இடைநிறுத்தியுள்ளது. EaseMyTrip இணையத்தளம் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா... Read more »

ஊடகங்களின் மூலம் பிரச்சினைகளை முன்வைத்த வடமாகாண கடற்றொழிலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தின்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே எமது கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வருகின்றோம் என... Read more »

இணையவழி கடனில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

இணையவழி கடன் வழங்குநர்களினால் நாட்டில் பல்வேறு பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ‘இணையவழி கடன் மாபியாவுக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் அமைப்பின் உறுப்பினர்களை... Read more »

கடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் இலங்கை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதன் முக்கியத்துவத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகளுடன் கடந்த வருட இறுதியில் கொள்கை அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் அறிக்கையொன்றை... Read more »

இரத்தினக்கல், ஆபரணத் துறைகள் பாரிய சிக்கலில்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ‘‘புதிய பொருளாதார மண்டலத்தின் ஊடாக இந்த தொழில் துறையினர் ஒரே இடத்தில் இருந்து பணியாற்ற முடியும். நாட்டின் முக்கியமான துறைகளாக இவை இரண்டும் இருப்பதால்... Read more »

அலாஸ்கா ஏர்லைன்ஸ் தரையிறங்க தடை

171 போயிங் 737 MAX 9 ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை 170 விமானப் பயணங்களையும், இன்று திங்களன்று கூடுதலாக 60 விமான பயணங்களையும் ரத்து செய்துள்ளது. இன்னும் சில... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு இரத்து

ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பாடசாலை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் நாகஸ்தன்னே அருண தேரர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இதன்காரணமாக... Read more »