மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம்

யாழ். இந்தியத் தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை எதிர்வரும் 02.10.2022 அன்று நினைவுகூரும் முகமாக இன்று துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம் யாழ்ப்பாணத்திலுள்ள காந்தி சிலையடியிருந்து வட்டுக்கோட்டை கல்லூரி வரை இடம்பெற்றது.

இவ் துவிச்சக்கரவண்டிப்பயண ஊர்வலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக சென்று சத்திரச்சந்தியூடாக நாவாந்துறை, காக்கைதீவு, காரைநகர் வீதியூடாக வட்டுக்கோட்டை கல்லூரியினை சென்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் கலந்துகொண்டு துவிச்சக்கரவண்டி பயணத்தை ஆரம்பித்துவைத்தார்.

Recommended For You

About the Author: webeditor