CIDயின் பொறுப்பில் உள்ள வாகனங்களை கையளிக்குமாறு உத்தரவு!

யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை மேலதிக விசாரணைகளுக்காக, தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்... Read more »

சீன எதிர்ப்பு வாதத்தை மீண்டும் கையில் எடுக்கும் மைத்திரி

இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டுமென்ற தீப்பொறியை அரசாங்கம் பற்ற வைத்துள்ளது. ஆளுங்கட்சிக்கும்... Read more »
Ad Widget

மியான்மரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை

மியான்மரில் அண்மையில் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளின் செலுத்துனர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட ஏனைய 13 மீனவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும், பொது மன்னிப்பின்... Read more »

ரணில் அரசாங்கம் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘‘மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விவகாரங்களில் இலங்கை உரிய தர நிர்ணயங்களை எட்டத் தவறியுள்ளது. பொறுப்புக்கூறல் விவகாரங்களில் நிலவி வரும் குறைபாடுகள்... Read more »

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்று இந்தியாவில் கூறியது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய மற்றும் அரச விரோத கருத்து என பலர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.... Read more »

அமெரிக்கா, சீனா, இந்தியா எம்முடனான உறவை விரும்புகின்றன

‘‘தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயத்தையும் செய்யாது. ஆனால், சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படும்.‘‘ இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட... Read more »

குளோபல் க்ரெஸ்ட் கப்பலுக்கு இலங்கை 15 மில்லியன் ரூபா அபராதம்

செயற்கைக்கோள் பகுப்பாய்வு படங்களின் மூலம் கடலில் சட்டவிரோதமான முறையில் எண்ணெயை வெளியேற்றிய கப்பலுக்கு எதிராக சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை 15 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது. செயற்கைக்கோள் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்குப் பின்னர் இந்த நாட்டில் கப்பலொன்றுக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே... Read more »

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் போர்வையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் யோசனை கொண்டு வரப்படுமாயின் அதனை எதிர்ப்பது என சகல எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இது சம்பந்தமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய கருத்தரங்கொன்றை ஏற்பாடு... Read more »

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் 35 நாடுகளின் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (17) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி... Read more »

பெரும் அதிகார அரசியலில் சிக்கியுள்ள தீவு

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரைக்கு சற்று அப்பால் ஒரு கண்ணீர்த்துளி வடிவிலான தனது தீவு, அண்மைய ஆண்டுகளில் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பெரும் அதிகார அரசியலில் சிக்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அஃப்ரீன்... Read more »