மொட்டுக்கட்சியை மையப்படுத்திய ராஜபக்ச தரப்பினால் எதையும் சாதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ராஜபக்ச தரப்பில் இருந்து எவா் வேட்பாளராகப் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்றும் தமது தரப்பு வேட்பாளர் வெற்றிபெறுவாரென நாமல் ராஜபக்ச... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இறுதியானது அல்ல எனவும் நாட்டை கட்டியெழுப்பும் ஆரம்பம் எனவும் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »
உலகில் குறைவான மன உளைச்சலுக்கு உள்ளான நாடுகளில் இலங்கை தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபின் லைப் (Sapien Labs) இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி இலங்கையில் மன உளைச்சலுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.... Read more »
இலங்கையில், 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என அவர் மேலும்... Read more »
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக்... Read more »
இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »
எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சிகளின் உள்ளக வட்டாரங்களை கோடிட்டு தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »
அரச நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வருடாந்தம் செலுத்தப்படும் தொகை இருநூற்று ஐம்பத்தாறு கோடி இருபது இலட்சம் ரூபா (2562 மில்லியன் ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்பினாலும், ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய தினம் (மார்ச் 11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்... Read more »

