முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர்... Read more »
இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று வியாழக்கிழமை அறிவித்த பின்னரும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர்... Read more »
தொழில் நிமித்தமாக மலேசியாவுக்கு சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்த மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக... Read more »
நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகாரபூர்வ வெளியீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ஆம்... Read more »
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் 28 வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (10)நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (19) இடம்பெற்றது. இதன்போது இலங்கையின்... Read more »
“தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த 10 வருடங்களில் அதாவது 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 458247 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதன்படி, 2014-2015ஆம் ஆண்டுகளில் 16330 மில்லியன் 2015-2016ஆம் ஆண்டில் 12084... Read more »
சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டத்திற்காக அடுத்த வருடத்திற்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல கடினமான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் விடுத்த... Read more »
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் கையொப்பதுடன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால... Read more »

