விபத்தில் உயிரிழந்த கணவனுக்கு உரிமை கோரும் 4 மனைவிகள்

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

தற்போது இவரின் சடலத்தை ஏற்றுக்கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் பின்னணி

பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன அதிகாரி என்ற 59 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

சைக்கிளில் பயணித்த இருவரும் குருநாகல் நோக்கிச் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்த முற்பட்டபோதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது குறித்த நபர், குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது அவரது சடலத்தை 4 மனைவிகள் உரிமை கோரியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin