நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன... Read more »
இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி, அரச மற்றும் அரை-அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எப்.பி.ஐ (FBI) இன் கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். நேர்காணலொன்றின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். (எப்.பி.ஐ என்பது புலன் விசாரணை கூட்டாட்சிப்... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை,... Read more »
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (29) முடிவடைகிறது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமானது. முதல்கட்ட வாக்களிப்பு 24, 25ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இரண்டாம்கட்ட வாக்களிப்பு நேற்று 28ஆம் திகதியும் இன்று 29ஆம் திகதியும்... Read more »
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக... Read more »
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா... Read more »
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண... Read more »
நுவரெலியாவில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக பிற்பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று (28) பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவின் தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில்... Read more »
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (ஏப்ரல் 28) காலை 6:00 மணி வரை இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களைத் தவிர,... Read more »

