யூரோ கால்பந்து தொடரின் குழு ‘பி’ ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி, தோல்வியின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மூன்று முறை சாம்பியனான (1964, 2008, 2012) ஸ்பெயின் 2008 முதல் குழுநிலையில் மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. குரோஷியாவை... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தலை நடத்துவோம் என ஏறக்குறைய எதிர்க்கட்சிகளின் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் கூறியுள்ளனர். அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நாட்டில் தெரிவுசெய்யப்பட்டிருப்பார் என்பதுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளும்... Read more »
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் அதற்குச் சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனி நிறுவனமாக மாற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்மூலம், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதுடன், எரிபொருளின் தரம், திறன்... Read more »
பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே இன்று வியாழக்கிழமை (27.06.24) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை அவர்... Read more »
நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. உலகில் மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும். 32 நாடுகளில்... Read more »
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆவணங்கள் பெறப்பட உள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல்... Read more »
இந்தியாவில் தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. அதுமட்டுமின்றி,... Read more »
கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிசாரிடம் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த... Read more »
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர், ஜப்பானிய... Read more »
பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதி உயர்வடைந்துள்ளது. எதிர்கட்சியான தொழிற் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ஸின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது கன்சர்வேற்றீவ் கட்சி... Read more »

