மறுசீரமைக்கப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் அதற்குச் சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனி நிறுவனமாக மாற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதுடன், எரிபொருளின் தரம், திறன் ஆகியவற்றை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் முடியும் என அமைச்சர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன மீளாய்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மற்றும் சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் செயல்முறை தொடர்பில் நேற்று (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

Recommended For You

About the Author: admin