ஹம்பாந்தோட்டையில் அனர்த்த அவசர நிலை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த அவசர நிலை காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், 253 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிரியந்த சுமனசேகர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

யாழ் இசை நிகழ்ச்சி இரத்து : நாடு திரும்ப முடியாத நிலையில் பாடகர் ஹரிஹரன்

கடும் மழை காரணமாக தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியில் கலந்துகொள்வதற்காக இந்தக் குழுவினர் வந்திருந்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில்... Read more »
Ad Widget

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே சென்னை எக்மோர் – கோட்டயம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-கோட்டயம் சிறப்பு ரயில், டிச., 18, ஜனவரி 1, 29 ஆகிய திகதிகளில் இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர்,... Read more »

சரிகமப டைட்டில் வின்னராகினார் கில்மிஷா : பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார். கடந்த சில... Read more »

சுமந்திரன், சம்பந்தனின் முகமூடியே உலகத் தமிழர் பேரவை

உலகத் தமிழர் பேரவை என்பது கூட்டமைப்பின் முகமூடியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த உலகத்தமிழ் பேரவையின் முகமூடியாக சுமந்திரன்... Read more »

19 வயதுக்கு உட்பட்ட புதிய ஆசிய சம்பியனான பங்களாதேஷ்

எட்டு நாடுகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை பங்களாதேஷ் அணி வென்றுள்ளது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் 34 வருட வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர்... Read more »

தென் சீனக்கடல் எனக்கே சொந்தம் என்கிறது சீனா

தென் சீனக் கடலில் பதற்றம் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது எனவும் தென்சீனக் கடல் தொடர்பில் பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனா அதன் அண்டை நாடுகளுக்குப் பாரிய சவாலாக இருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினென்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு  (16) டோக்கியோவில்... Read more »

தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞன் வாளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டு கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற... Read more »

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை

இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் இயங்கும் சில பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் தரகர்கள் மூலமாக இந்த பிள்ளைகளின் கைகளுக்கு செல்கின்றன. சில மருந்தகங்களில் விற்பனை... Read more »

அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் எனது சேவையை எதிர்பார்க்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மக்கள்... Read more »