அழைப்பு விடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்

தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக... Read more »

தாய்வானில் ஜனவரி 15 ஜனாதிபதி தேர்தல்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, சீனா பெரியளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என தாய்வான் தெரிவித்துள்ளார். எனினும் சீனாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்வானில் எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்... Read more »
Ad Widget

உலகப் புகழ்பெற்ற பிரபலம் மரணம்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த உணவக உரிமையாளரும், உணவுகள் குறித்து எழுதும் எழுத்தாளருமான பில் கிரங்கர் லண்டனில் உயிரிழந்துள்ளார். 54 வயதான பில் உணவுகள் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் எல்லாம் 1 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பில், 22... Read more »

ஜனவரியில் தேர்தல் பிரசாரம்

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. புதிய அரசியல் கூட்டணிகளை இணைத்துக்கொண்டு இந்த தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்கும்... Read more »

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிஷா

சென்னையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு பாடகி கில்மிசா சென்றுள்ளார். ஜீ தமிழில் சனி மற்றும் ஞாயிறு தினத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி... Read more »

இ.போ.சபை முன்பதிவு சேவை இனி இலகு

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி... Read more »

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கொலை ஒன்றை செய்ய தயாராக இருந்த ஹீனடியன மஹேஷின் சகா ஒருவரை பொலிஸார் கட்டுநாயக்கவில் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கிக்கான 5... Read more »

செங்கடல் வழி கட்டணங்கள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பிராந்தியத்தில் யேமனின் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக அந்த கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்கள் தமது கட்டணங்களை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கக்கூடும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் நிலைமையின் அடிப்படையில் இலங்கையில்... Read more »

சமாதானத்தை ஏற்படுத்த 3 நிபந்தனை

காஸாவில் ஹமாஸூடனான போரில் சமாதானத்தை ஏற்படுத்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹமாஸ் அமைப்பு அழியவேண்டும் எனவும் காஸா ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத பகுதியாக மாற வேண்டும் எனவும் பாலஸ்தீன சமூகம் போராட்ட போக்கைக் கைவிடவேண்டும் எனவும் பெஞ்சமின்... Read more »

ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய நிதி அமைச்சர் Shun’ichi Suzuki எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டு நிதி அமைச்சர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் நான்கு நாள்... Read more »