பெப்ரவரியில் வெளிநாட்டு கையிருப்பு 4.5 பில்லியன்

2024 பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 4,517 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரியில் குறித்த தொகையானது 4,496 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணயத்தை குவிப்பதன் மூலம்... Read more »

நாட்டை கடனில் இருந்து காப்பாற்றுவோம் -ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக்... Read more »
Ad Widget

பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கையை நிராகரித்தது ரஷ்யா

உக்ரெய்னுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபடுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கையினை ரஷ்யா நிராகரித்துள்ளது. மேலும் உக்ரெய்னின் ஜனாதிபதி செலன்ஸ்கியிடம் தாம் சரணாகதி அடையமாட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதலில் ஈடுபடும் தரப்புக்களில் ஒருதரப்பு மிகவும் மோசமான பாதிப்பை அடையும் போது... Read more »

இன்றைய ராசிபலன்கள் 11.03.2024

மேஷம் விவகாரங்களை வளர்க்காதீர்கள். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலையை உருவாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க பாடுபடுவீர்கள். ரிஷபம் போட்டி பந்தயங்களில்... Read more »

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

7 ஒஸ்கார் விருதுகளை வென்றது ‘ஓப்பன்ஹெய்மர்’

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) படம் பல பிரிவுகளில் ஒஸ்கார் விருதை (Oscars 2024) வென்றுள்ளது. அணு ஆயுதத்தை முதல் முறையாக கண்டுபிடித்த ரொபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.... Read more »

கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. பின்னர்... Read more »

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவா?

எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சிகளின் உள்ளக வட்டாரங்களை கோடிட்டு தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »

பிரான்ஸில் நீர் பற்றாக்குறை

நீர் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸின் தெற்குப்பகுதியில் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது இடைநிறுத்தபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் வார் பிரிவில் உள்ள 9 கம்யூன்களை உள்ளடக்கிய அதிகாரசபையினால் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து புதிய கட்டுமானங்களுக்குமான... Read more »

அரச நிறுவன குத்தகைக்கு வாகன செலவு 256 கோடி ரூபா

அரச நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வருடாந்தம் செலுத்தப்படும் தொகை இருநூற்று ஐம்பத்தாறு கோடி இருபது இலட்சம் ரூபா (2562 மில்லியன் ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்... Read more »