வருமானத்தில் அறிவிடப்பட்ட வரியில் நிவாரணம்; வாகன இறக்குமதி- ஜனாதிபதி நேற்று ஆற்றிய முழுமையான உரை

“கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்று நடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறை தொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதி பிரதி அமைச்சரும் தெளிவூட்டினர். அதனால் அதுபற்றி விரிவாக பேசவில்லை. இருப்பினும், 2028 ஆம் ஆண்டளவில் கடன்... Read more »

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 1,988 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதத்தின் முதல் 15... Read more »
Ad Widget

அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது!

அம்பாறை, அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது என்றும், குறித்த பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த... Read more »

$150 மில்லியன் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ADB!

150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ மற்றும் இலங்கை மின்சார சபையின்... Read more »

‘நாமலின் சட்டப் பட்டம் போலியானது: நான் நேரில் கண்ட சாட்சி, இலங்கைக்கு வருகிறேன்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன குறிப்பிடுகின்றார். வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டுக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம்... Read more »

மலிவான விலையில் மதுபான போத்தல் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானம் ; மதுவரி திணைக்களம்..

சட்டவிரோத மதுபானம் பரவலாக பரவியுள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானத்தினால் கலால் வரி வருமானத்தில் சுமார் 30% இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கலால் ஆணையாளர் கூறுகிறார். இந்த மது ஒழிப்பை ரெய்டுகளால் மட்டும் செய்ய முடியாது எனவும், அதில் கவனம் செலுத்தும் பொதுமக்களிடம் மாற்று யோசனை கொண்டு... Read more »

மணல் கடத்திய டிப்பர் வாகனம் பொலிஸாரின் சூட்டில் சிக்கியது! – கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர். எனினும், கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம்... Read more »

ஞானசார தேரருக்கு பிடியாணை !

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின்... Read more »

மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்!

மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு... Read more »

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும முதல் கட்டத்தில் தகுதி பெற்ற சுமார் 6,000 பேர் வங்கிக் கணக்குகளைத் திறக்காததால் கொடுப்பனவுகளை பெறவில்லை... Read more »