ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு அனுப்ப வேண்டாம்… ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்!

முல்லைத்தீவு கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று (7) எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளார். மியன்மாரில் யுத்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், நிராயுதபாணியாக வந்த... Read more »

மாணவியின் நிர்வாண காட்சிகளை படம் பிடித்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பொலிசார் ஆதரவா? தொடங்கியது சிறப்பு விசாரணை

பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து , மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த திவுலபிட்டிய ஆசிரியருக்கு கொடுத்துள்ள பொலிஸாரின் விசித்திரமான ஆதரவு குறித்தும் , சார்பு நிலை குறித்தும், அதிபரும் மினுவாங்கொடை பிராந்தியக் கல்விப் பணிப்பாளரும் விசேட விசாரணைகளில்... Read more »
Ad Widget

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள்!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டோல்பன்கள்  உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச்... Read more »

இன்றைய ராசிபலன் 08.01.2025

மேஷம் வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ரிஷபம் புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். தவறிய... Read more »

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது.

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவரில் மோதி சுழன்றடித்து கார் நின்ற நிலையில், அஜித்குமாருக்கு என்ன ஆனதோ என பலரும் பதறினர். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்ற அஜித்குமார் உயிர்பிழைத்துள்ளார். இதுபோன்று... Read more »

மேலே பார்த்துவிட்டு வீட்டுக்கு போக பாராளுமன்றம் வரவில்லை அர்ச்சுனா கடும் கோபம்

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்; அர்ச்சுனா சபையில் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவரிடம் காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் சபாநாயகரின் அறிவுறுத்தல் கிடைக்கபெற்ற நிலையிலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை... Read more »

அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐஸ் ஹொக்கி தகுதிப் போட்டிகள் இரத்து

அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹாக்கி சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகளை இரத்துச் ரத்துசெய்துள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.  உள்ளூர் காவல்துறையிடம்... Read more »

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா

அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின்  நூற்றாண்டு விழா யாழில் இன்று நடைபெற்றது. மல்லாகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான அன்னையின்; திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை சென்றடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.... Read more »

இந்து மதகுரு மீது தாக்குதல்-அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார் கண்டனம்

இன்று (7)கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்வு நோக்கத்திற்காக சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த மாலையும் அறுத்தெறியப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயப்பட்ட மதகுருவானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் வீதி ... Read more »

கிளிநொச்சியில் இருந்து கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில்... Read more »