கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில்... Read more »

‘கைதானவர்கள் பிணையில் விடுதலையாவர்’ ரணில் : நினைவேந்தால் கேள்விக்குப் பதில் இல்லை என்கிறார் மனோ

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் உரையாடிய விடயங்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை. மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 16.05.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக் கூடிய நாளாக இருக்கும். பெருசாக எந்த அலைச்சலும் இருக்காது. அலுவலகத்திலும் சரி, வியாபாரம் செய்யும் இடத்திலும் சரி, நீங்கள் ராஜாவாக இருப்பீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.... Read more »

ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த மூன்று பிரித்தானியர்கள் கைது

ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரில் பிரித்தானிய எல்லைப் படையின் அதிகாரி ஒருவரும் உள்துறை அலுவலகத்தின் குடிவரவு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான Chi Leung Wai, 37 வயதான Matthew... Read more »

நியூ கலிடோனியாவில் அவரச நிலை பிரகடனம்

1980 களின் பின்னர் நியூ கலிடோனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அமைதியின்மையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காயமடைந்துள்ளனர். நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் வன்முறையாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களுடனான மோதலில் பல... Read more »

தேசிக்காயின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை உள்ளிட்ட பகுதியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து தேசிக்காய் விநியோகிக்கப்படுவதுடன், போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தினால் மொத்த மற்றும் சில்லறை... Read more »

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு... Read more »

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி: சரத் வீரசேகர

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனிநாட்டுக் கோசம் வெற்றிபெற்று விடும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா சபையின் உயர்ஸ்தானிகர், இந்த சாட்சியங்களை அடிப்படையாகக்... Read more »

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: விடுதி முகாமையாளர் கைது

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண்... Read more »

ஸ்லோவாக்கியா பிரதமரை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம்

ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியாவின் தலைநகரில் இருந்து வடகிழக்கில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், காயமடைந்த பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »