உக்ரைன்–போலந்து ரயிலை தாக்கிய ட்ரோன் தாக்குதல்: நேட்டோ எல்லை அருகே பதற்றம்!!

உக்ரைன்–போலந்து ரயிலை தாக்கிய ட்ரோன் தாக்குதல்: நேட்டோ எல்லை அருகே பதற்றம்!!

உக்ரைனின் மேற்குப் பகுதியில், போலந்து எல்லையிலிருந்து வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Yahodyn ரயில் நிலையத்தில், கீவ்–வார்சா இடையேயான பயணிகள் ரயிலின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

ட்ரோன் ரயிலின் எஞ்சினை தாக்கியதால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

 

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் போலந்தை நோக்கி மீண்டும் புறப்பட்டது.

 

இந்த சம்பவம் மேலும் கவலைக்குரியதாக மாறியதற்கு காரணம், ட்ரோன் தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதே பகுதியில் முக்கிய மேற்கத்திய அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை பிரமுகர்கள் பயணித்திருந்ததாக கூறப்படுவதுதான்.

 

உக்ரைன் ரயில்வே நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, சில நிமிடங்களுக்கு முன்பு புறப்பட்ட ஒரு தூதரகக் குழுவின் ரயிலை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

அந்தக் குழுவில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் CIA இயக்குநர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதல் நேட்டோ உறுப்புநாடான போலந்தின் எல்லைக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதால்,

 

ரஷ்யா–உக்ரைன் போரின் பதற்றம் மீண்டும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For You

About the Author: admin