ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சீனா தயாரித்த DF-15 ரக பாலிஸ்டிக் ஏவுகணைகள்!!
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சீனா தயாரித்த DF-15 ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை
சவூதி அரேபியா பிரயோகித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியா தனது பாரிய நவீன இராணுவக் கட்டமைப்பை வெறுமனே காட்சிப்படுத்துவதற்காக வைத்திருக்கவில்லை எனவும்,
களத்தில் தீர்க்கமான தாக்குதல்களுக்கு அதனைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,
தனது ஆயுதக் கிடங்கில் உள்ள அதிநவீன சீன தயாரிப்பு DF-15 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி அரேபியா களமிறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபிய அரசாங்கமோ அல்லது அதன் தலைமையிலான கூட்டுப் படைகளோ யேமனில்
சீன DF-15 பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

