இங்கிலாந்துடனான T20I தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐசிசியின் சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய, உடை மாற்றும் அறையில் (Dressing Room) தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக இந்திய அணியில் இணைந்துள்ளார்.
16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தீவிரமாகப் பின்பற்றுவதால், இந்த விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டிகளின் போதும் மற்றும் அணி ஆலோசனைகளின் போதும் சக வீரர்களுடன் அவர் இணைந்து செயல்பட அனுமதி உண்டு.
இருப்பினும், உடை மாற்றும் தருணங்களில் மட்டும் அவர் ஏனைய வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பிரத்தியேகமான அறையைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

