மீண்டும் நாட்டிற்கு வரும் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்து கட்சியை வழிநடத்துவார் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

பல மாற்றங்கள் ஏற்படலாம்
பொலன்னறுவை கிரித்தலே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பொதுஜன பெரமுன கட்சியினை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பசில் ராஜபக்சவின் வருகையில் கட்சிக்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor