யாழ் தென்மராட்சி மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்வான செய்தி!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த நேர்முகத்தேர்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.

இதன்படி, நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதுடன் வரும்போது தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor