மாம்பழம் சாப்பிட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து மரணம்

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது சுவையான மாம்பழங்கள் தான் ஆனால், அதே மாம்பழம் இரண்டு அப்பாவி உயிர்களைப் பறித்திருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் இப்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த வைஜிநாத் இந்துமதி தம்பதியினர் தங்கள் 4 மகள்களுடன் ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்களது உறவினர் ஒருவர் ஆசையாக வாங்கி வந்த மாம்பழங்களை, தாய் இந்துமதியும் அவரது 4 மகள்களும் ஆவலோடு சாப்பிட்டுள்ளனர்.

திடீர் வாந்தி, மயக்கம்… அடுத்தடுத்து நேர்ந்த சோகம்

மாம்பழம் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே ஐந்து பேருக்கும் கடுமையான வயிற்று வலியும், கட்டுப்படுத்த முடியாத வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

⭕️நிலைமை மோசமடையவே, அனைவரும் கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் விதியின் கொடூரம்… சிகிச்சை பலனின்றி வைஜிநாத்தின் 3-வது மகள் புவனேஸ்வரி (17) கடந்த 8-ம் தேதியும், அவரைத் தொடர்ந்து அடுத்த நாளே (9-ம் தேதி) கடைசி மகள் சந்தியாவும் (10) பரிதாபமாக உயிரிழந்தனர் .தற்போது தாயும் மற்ற இரு மகள்களும் தீவிர சிகிச்சைக்குப் பின் சீரான நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நாராயணகுடா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்துடன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் (Food Safety Officers) அந்த வீட்டிற்கு விரைந்து சென்று, அங்கிருந்த மாம்பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களைக் கைப்பற்றி ஆய்வகத்திற்கு (Lab) அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் தரப்பு விளக்கம் சிறுமிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசரல் (Visceral) லேப் ரிப்போர்ட் வந்த பிறகே, இது ‘உணவு நச்சுத்தன்மை’ (Food Poisoning) காரணமா அல்லது மாம்பழத்தில் கலக்கப்பட்ட ஆபத்தான இரசாயனங்கள் காரணமா என்பது உறுதியாகத் தெரியும்.”

மாம்பழம் சாப்பிடும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டியவை 👇

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. சந்தையில் விற்கப்படும் மாம்பழங்களை வாங்கும் போது நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்…

🚫 செயற்கை பழுக்கவைப்பு (Chemicals) – மாம்பழங்களை சீக்கிரம் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ‘கால்சியம் கார்பைடு’ போன்ற இரசாயனங்கள் உயிரையே பறிக்கும் நச்சாக மாற வாய்ப்புள்ளது.

மாம்பழங்களை வாங்கியவுடன் அப்படியே சாப்பிடக் கூடாது .குறைந்தபட்சம் 1 முதல் 2 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊறவைத்த பின்னரே தோலை சீவி சாப்பிட வேண்டும்.

இனி மாம்பழம் வாங்கும் போது கலர்ஃபுல்லான தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அது இயற்கையானது தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் See less

Recommended For You

About the Author: admin