களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்துக

பட்டிவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் தற்போது வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor