மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா.

மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா.

மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கானது சேனையூர் மக்களால் ஆரம்ப காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பத்ததி முறையிலான வேள்விச் சடங்காகும் . இதில் சில குடும்பங்கள் இணைந்து இந்த வேள்வியைச் செய்வார்கள்.

மாரியம்மாள் காத்தவராயனை கழுமரத்தில் ஏறும்படி கட்டளையிட காத்தவராயன் கழுவில் ஏறிய பின் மாரியம்மாளின் தங்கையாகிய பேச்சியம்மாள் அவ்விடம் வந்து காத்தவராயனை காப்பாற்றிய புராணக் கதையை மையமாகக் கொண்டே மாரியமம்மாள் வேள்வியோடு இந்த பேச்சியம்மன் வேள்வியையும் இணைத்து மாரியம்மன் கழுமர வேள்வியாக செய்யப் படுகின்றது.

இச்சடங்கு வழமையான மாரியம்மன் வேள்வியைப் போன்றே நடைபெறும். ஆனால் வீட்டின் உள்ளே வாலை, புவனை, திரிபுரை ஆகிய தேவியருக்கு கும்பம் வைத்தும், வீட்டின் வெளியே சக்தி தேவியான பேச்சி அம்மனுக்கு கூடாரம் அமைத்தும், வீட்டிற்குள் வைக்கப்பட்ட கும்பங்களுக்கும் பேச்சியம்மனின் கூடாரத்திற்கும் நேரெதிராக கழுமரம் நடப்பட்டு இருக்கும். இக்கழுமரத்தில் கோழி ஏற்றப்படும்.

Recommended For You

About the Author: admin