பிரித்தானிய இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் உதவி!

பிரித்தானிய இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை விமானம் மூலம் இலங்கைக்கு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் குடியேறியவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை. அத்துடன் அவர்கள் எந்த நேரத்திலும் வெளியேற சுதந்திரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி

இந்த நிலையில் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேறுவதற்கு உதவும், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இங்கிலாந்து அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை, இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்காக, அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குத்தகைக்கு வழங்கியுள்ளது. அங்கு புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் பல மாதங்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor