மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி

சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான கபில சந்திரசேன வழங்கிய இரகசிய வாக்குமூலத்தின் ஊடாகவே இந்தத் திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2012-2013 காலப்பகுதியில் 10 விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில், சுமார் 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாகப் பரிமாறத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் முதற்கட்டமாக 2 மில்லியன் டொலர் நிதி, சந்திரசேனாவின் மனைவியுடன் தொடர்புடைய புருனே நிறுவனக் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஊடாக இலங்கைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊழல் வழக்கில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமிந்திர ராஜபக்ஷவும் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

அவரது வங்கிக் கணக்கில் 160,000 டொலர் வரவு வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், கபில சந்திரசேனாவை ஏப்ரல் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin