சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! நாடாளுமன்றத்தில் ரவி கருணநாயக்க வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை பகிரங்கப்படுத்தினார்.
ரணில் விக்ரமசிங்கவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமடையத் தாம் வாழ்த்துவதாகவும் ரவி கருணநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டது அல்லது எந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

