ஈரானின் “கண்களைக்” குருடாக்கிய இஸ்ரேல்:
உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் டெஹ்ரானில் படுகொலை
– IDF அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஈரானின் அதியுயர் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஈரான் மீள்வதற்குள், இஸ்ரேல் தனது அடுத்த பாரிய இலக்கை வீழ்த்தியுள்ளது.
ஈரானின் உளவுத்துறை அமைச்சரான இஸ்மாயில் காதிப் (Esmaeil Khatib), தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் (Targeted strike) கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
IDF-இன் குற்றச்சாட்டுகளும் அறிவிப்பும்:
இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டமை குறித்து IDF வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில்
, “ஈரானிய ஆட்சியின் அடக்குமுறைகள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதில் காதிப்பின் உளவுத்துறை அமைச்சகம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக,
ஈரானில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதிலும், அப்பாவிப் போராட்டக்காரர்களைக் கைது செய்து கொலை செய்ததிலும் இவர் கணிசமான பங்காற்றியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் சிரேஷ்ட தளபதிகள் வரிசையாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், உளவுத்துறை அமைச்சரின் இந்த அழிவானது ஈரானிய ஆட்சியின் ‘கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளை’ (Command and control structures) பெருமளவு சிதைத்துள்ளதாக IDF பெருமிதம் வெளியிட்டுள்ளது.
ஈரானின் மௌனம்:
இஸ்ரேலின் இந்த அதிரடியான அறிவிப்பு குறித்து ஈரான் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான கருத்துகளையும் வெளியிடவில்லை.
லாரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்த ஈரான் காலதாமதம் செய்ததைப் போலவே, உளவுத்துறை அமைச்சரின் மரணம் குறித்தும் ஈரான் மௌனம் காத்து வருகின்றமை சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

