ஈரானைக் காப்பாற்ற ஆசியாவில் போர் பதற்றத்தை உருவாக்கும் சீனா:
தாய்வானைச் சுற்றிவளைத்த படைகள் –
வடகொரியாவின் ஏவுகணைத் தாண்டவம்!
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் வடகொரியாவும் பாரிய இராணுவ நகர்வுகளைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான தாய்வான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகள், அமெரிக்காவிற்கு இரட்டை முனைகளில் (Two-front war) நெருக்குதலை ஏற்படுத்தும் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
தாய்வான் வான்வெளியில் சீனாவின் ஆக்கிரமிப்பு:
மார்ச் 13-ஆம் திகதி வரை அமைதி காத்த சீனா, தற்போது தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தினுள் (ADIZ) தொடர்ச்சியான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.
மார்ச் 15-ஆம் திகதி மாத்திரம் முழுமையான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட 26 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க் கப்பல்களைத் தாய்வான் எல்லைக்குள் சீனா அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாகத் தாய்வான் தனது F-16 போர் விமானங்களையும் ஏவுகணை அமைப்புகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை மழை:
மறுபுறம், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ‘வாரியர் ஷீல்ட்’ (Warrior Shield) இராணுவப் பயிற்சிக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, மார்ச் 14-ஆம் திகதி வடகொரியா ஒரே நேரத்தில் 10 பலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் (Sea of Japan) வீசியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்கு (EEZ) மிக அருகில் வீழ்ந்துள்ளன. அத்துடன், தென்கொரியாவைத் தாக்கக்கூடிய 600mm அதிதூர ராக்கெட் செலுத்திகளையும் வடகொரியா சோதித்துள்ளது.
பூகோள அரசியல் பின்னணி (Geopolitical Masterplan):
ஈரான் போருக்காகத் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு நகர்த்தியுள்ளது.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தியே சீனாவும் வடகொரியாவும் ஆசியாவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிராகக் கப்பல்களை அனுப்புமாறு கூட்டாளிகளிடம் கோரும் நிலையில், தமது சொந்தப் பாதுகாப்பைக் கருதி ஜப்பானும் தென்கொரியாவும் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நெருக்கடியைச் சீனா தந்திரமாகக் குறைக்கும் மாஸ்டர் பிளான் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

