மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள்

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள்

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ், ஒரு கிலோகிராம் ஐஸ் போன்றன மீட்கப்பட்டுள்ளன.

 

இவை மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கொழும்பு 10, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இலங்கை பிரஜைகளின் முகவரிகளுக்கே இந்தப் பொதிகள் வந்துள்ளன.

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் அது தொடர்பான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin