வடக்கு கலைஞர்களுக்கான களங்கள் அதிகரிப்பு; பணிப்பாளர் உறுதி

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கடப்பாடாக நான் நோக்குவது கலைஞர்களையும் எங்களது திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதே. கலைஞர்களுக்கானது தான் எங்களுடைய திணைக்களம்.

முன்பை விட கலைஞர்களுக்கான களங்களை ஏற்படுத்தி அவர்களுடைய கலைகள் மூலம் சமூகத்தில் இருக்கின்ற சில தீய விடயங்களைப் போக்கி பொது மக்களுடைய மனங்களை நல்வழிப்படுத்துவதே எனது விருப்பம் என வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor