12 கிலோ கேரள கஞ்சா யாழில் மீட்பு..!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதன்போது சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

