புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கும் ஜனாதிபதி

இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் இன்று தமது நாடாளுமன்ற சிறப்பு அறிக்கையில் குறிப்பிடவில்லை. இது குறித்து ஜப்பானில் தாம் மோடியுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி, இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உதவியளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கான உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor