வடக்கு மாணவர்களுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் காசோலைகள் வழங்கி கௌரவிப்பு

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகள் மட்டத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு திறன் ஆற்றல் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறி புலமைப்பரீட்சை வழங்கும் நோக்கிலான காசோலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ். ஜெட்வின் தனியார் விடுதியில் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதவிநிலை அதிகாரி எஸ்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் கலந்துகொண்டு வடமாகாணத்திலுள்ள 13 கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளில் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் அதி திறமைச்சித்தி பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட 13 மாணவர்களுக்கு ஒருவருக்கு 25,000 ரூபா வீதம் 3,25, 000 ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கினார்.

இதில் வடமாகாண அமைச்சுக்களின் செயலகம்,பணிப்பாளர்கள் அலுவலகம்,மாவட்ட செயலகம் அரச தொழில்துறை திணைக்களம் கல்வி,சுகாதாரம் விளையாட்டு,விவசாயம் உள்ளிட்ட துறைசார்ந்த அரச அதிகாரிகளுக்கான இந்திய புலமைப்பரீட்சை தொடர்பாக கருத்தரங்கு இடம்பெற்ற இதில் புலமைப்பரீட்சை தொடர்பான ஆக்கபூர்வமான விளங்கங்களும் வழங்கப்பட்டது.இந்தியபுலமைப்பரீட்சைக்கு வடமாகாணத்தில் இருந்து எவரும் முக்கியத்துவம் காட்டாத நிலையினையும் அதனை அரச அதிகாரி தெளிவூட்டல்களை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலையினை தெளிவூட்டப்பட்டது..

இவ் நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளூராட்சிதிணைக்கள ஆணையாளர் பற்றிக்
நிரஞ்சன் ,யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் நிர்வாக திறன் அலுவலகர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor