யாழில் மாயமான இளைஞன்சடலமாக மீட்பு!

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு – புதுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உருக்குலைந்த நிலையில் சடலம்
புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு சம்பவ தினமான நேற்று பகல் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிசார் சகிதம் சென்று மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த மாதம் 27 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிசார் எடுத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor