யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயம்..!
சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (18.10.2025) காலை 08.30 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர். இவர்களை கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் , திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் , உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி ஆகியோர் வரவேற்றார்கள் என்பதுடன் களவிஜயத்தின் ஞாபகார்த்தமாக அரச அதிபரிடம் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு பழைய பூங்காவில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.
இவ் விஜயத்தில் FAIR MED நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.உமாசங்கர் விளக்கமளிக்கப்பட்டது.
இவ் நல்லிணக்க களவிஜயத்தில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, கோப்பாய் “கிறவ்ரறி” கலைப்பொருள் உற்பத்தி நிலையம் மற்றும் சக்கர நாற்காலி திருத்தகம் என மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்றைய தினம் (17.10.2025) களத்தரிசிப்புக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


