உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்..!
உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் முன்னர் சங்கானை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்தார். இன்றையதினம் (13.10.2025) உடுவில் பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

