யாழ்.குருநகர் பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(5) யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 51 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து எட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

