இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..!
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது.
முறக்கொட்டாஞ்சேனை படைமுகாம் அமைந்திருந்த காணி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த காணிக்கு உரித்துடைய பாடசாலையின் பாவனைக்காக மீளளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (30.09.2025) திங்கட்கிழமை இராணுவ முகாம் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
1989 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் முகாமிட்டதன் பின்னர் அவர்களால் இலங்கை இராணுவத்தினருக்கு இப்பிரதேசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அங்கு இராணுவத்தினர் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இப்பாடசாலையை உடனடியாக ஆரம்பிக்ககூடிய நிலையில் இராணுவத்தினர் கையளித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்களின் தேவைக்காக காணப்படும் காணிகளும் நீதித் துறையின் அணுகலின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வந்த முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ணா பாடசாலை வளாகத்தில் இயங்கிய குறித்த இராணுவ முகாம் தற்போது முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதி பாடசாலை நிருவாகத்திடமும் மக்களிடமும் மீள ஒப்படைக்கப்படும் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி பிரதம அதீதியாக கலந்து கொண்டு முகாம் அமைந்திருந்த நிலத்தினை உரிய தரப்பினரிடம் கையளித்தார்.
சுமார் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த நிலப் பிரச்சினைக்கு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


