ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை

ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை

​கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.

​இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இராஜதந்திர உரையாடல்களுக்கு உறுதியளிப்பதுடன், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

​வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, கொழும்பு.
​2025 செப்டம்பர் 10.

Recommended For You

About the Author: admin